செஞ்சி: கணக்கன்குப்பம் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி பெண்கள் விளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். செஞ்சி அடுத்த கணக்கன் குப்பம் சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தின் 33வது ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு அருள்ஜோதி அன்ன ஆலயம் தனலட்சுமி தலைமை தாங்கினார். தீபம் அறக்கட்டளை நிறுவன பாலகிருஷ்ணன், கருணை இயக்கம், அஜந்தா நாகராஜன், மாவட்ட கவுரவ தலைவர் ஏழுமலை, மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வடலூரை புனித நகரமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர், முக்கிய சாலை வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் சம்பத், நிர்வாகிகள் மூர்த்தி, சரவணன், சர்தார் சிங், வீராசாமி, கோதாவரி, பிரேமா, காசி மங்கையர்க்கரசி, வனரோஜா ஜோதி, ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.