திருப்பரங்குன்றம் கோயிலில் நிர்வாக மூலம் பஞ்சாமிர்தம் விற்பனை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2026 04:07
திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்கள் விற்பனையை தொடர்ந்து பஞ்சாமிர்தம் விற்பனையையும் கோயில் நிர்வாகமே நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதால் நேற்று முதல் கோயில் நிர்வாகம் பஞ்சாமிர்தம் விற்பனை துவக்கியது.
கடந்த ஆண்டு வரை பஞ்சாமிர்தம் விற்பனை தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு ரூ. 31.14 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை ஏலம் போனது. இந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட ஏராளமான கோயில்களில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்த உத்தரவிட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டது. கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதுவரை சோலைமலை முருகன் கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விற்பனை செய்ய முடிவு செய்து நேற்று முதல் விற்பனை துவங்கியது. 2013முதல் புளியோதரை, சக்கரை பொங்கல், லட்டு, முறுக்கு, வடை, அப்பம் ஆகிய பிரசாதங்களை கோயிலில் தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.