புத்தேரி வரதராஜ பெருமாளுக்கு முத்தங்கி கவசம் சாற்றி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2026 05:07
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மூலவர் சுவாமிக்கு முத்தங்கி கவசம் சாற்றும் உற்சவம் நடந்தது. இதையொட்டி, இன்று காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் மூலவர் சுவாமிக்கு முத்தங்கி கவசம் சாற்றப்பட்டது. 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.