Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி சாரதா பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவர் சிலை சேதம்: கருடசேவை ரத்து
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவர் சிலை சேதம்: கருடசேவை ரத்து

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2026
10:07

காஞ்சிபுரம்: கா ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரதர் உற்சவர் சிலை சேதமடைந்துள்ளதால், நேற்று நடைபெறுவதாக இருந்த ஆடி கருடசேவை உத்சவம் ரத்து செய்யப்பட்டது.


இதனால், சுவாமி தரிசனம் காண ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். சேதமடைந்த சிலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோத்சவத்தின் மூன்றாம் நாள் கருட சேவை உத்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல, ஆனி, ஆடி மாதங்களில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் நடக்கிறது. அதன்படி, ஆனி மாதத்திற்கான ஆனி கருடசேவை உத்சவம், கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. ஆடி மாதத்திற்கான ஆடி கருடசேவை உத்சவம், நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால், ஆடி கருடன் உத்சவம் நடைபெறாது என, கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால், ஆடி கருடசேவை உத்சவத்தை காண ஆவலாக இருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 


இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் கூறியதாவது: கடந்த 3ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் செய்த போது, வரதராஜ பெருமாள் உற்சவர் சிலையில் கால் பாதம், கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிலையை சீரமைக்க வேண்டும் என, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் ஸ்தபதி மூலம் சிலை சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதத்தின் பவுர்ணமி தினமான நேற்று சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
நிம்மதியாக வாழ தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி அம்மனை தரிசிப்போம்.கைலாயத்தில் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar