வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2026 08:07
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வில்லியரேந்தல் ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி உற்ஸவ பெரு விழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் 14 நாட்கள் ஆடி உற்ஸவ பெருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா 16 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மதுரை அழகர்கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்து ஊர்க்காவலன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.