கருமத்தம்பட்டி: கொள்ளுப்பாளையம் ஸ்ரீ பொன் காளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த கொள்ளு பாளையத்தில் உள்ள ஸ்ரீ பொன் காளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஆடி மாத செவ்வாய் கிழமையை ஒட்டி, பொங்கல் விழா இன்று நடந்தது. முன்னதாக, ஸ்ரீ பொன் காளியம்மனுக்கு, பால், தயிர், இளநீர், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபாடுகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.