Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு ! மறைஞானசம்பந்தர் குருபூஜை(3.2.2013) மறைஞானசம்பந்தர் குருபூஜை(3.2.2013)
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனின் டெய்லர் யார் தெரியுமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 பிப்
2013
04:02

ஆண்டவன் ஆசியில், வித விதமாய் ஆடை அணிந்து  மகிழ்கிறோம். சபரிமலை, பழனி பாதயாத்திரையின் போது, வேறு விதமான உடை அணிகிறோம். கடவுளை பின்பற்றும் நமக்கே இத்தனை உடை வேறுபாடு இருக்கும் போது, கடவுளின் உடை எப்படி இருக்கும்! அதை வடிவமைக்க எத்தனை சிரத்தை  எடுப்பார்கள்? "எதையும் எளிதாய்  நினைப்பது தவறில்லை; ஆனால் எதுவும் எளிதாய் கிடைப்பதாக நினைப்பது தான், தவறு, என்பார்கள் அல்லவா, அது போலத்தான், கடவுளுக்கு ஆடை தயாரிக்கும்  பணியும், அவ்வளவு எளிதல்ல.  ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஆடைகளை நம்முன்னோர் அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வரிசையில், தமிழ்  கடவுளான முருகப்பெருமானுக்கு, ஒவ்வொரு படைவீட்டிற்கும் தனி அலங்காரம் உண்டு. மூன்றாம் படை வீடான பழநியாண்ட வரின் பிரதான அலங்காரம்(ஆடை) என்றதும் நினைவுக்கு வருவது, "ராஜஅலங்காரம்; அதன் பின் வேடர், பாலசுப்பிரமணியர்,  வைதீகாள், சாது அலங்காரங்கள்,  இவைகள் தான். பழநியாண்டவரின் அலங்கார ஆடைகள், மற்றும் அதன் தொடர்பான வஸ்திரங்களை செய்து வருபவர், பழநியைச் சேர்ந்த வி.எஸ்.சக்கரபாணி பிள்ளை சன்ஸ் உரிமையாளர் எஸ். முனுசாமி.  தலைமுறை கடந்து இத்தொழிலை தொடர்ந்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்திலிருந்து பழநிக்கு வந்து சுவாமிக்கு ஆடைகள், குடைகள், தொம்பைகள், பட்டு, முத்து சிலைகள்,  தேர்த்துணி, காவடி ஆகியவற்றை, கலை நயத்துடன் தயார் செய்து வருகின்றனர்.  பழநி மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு பக்தர்களுக்கும், ஆடைகள் தயார் செய்து அசத்தி வருகின்றார்.  ஒரு முறை, ஜனாதிபதி வெங்கட்ராமனின் பாராட்டை, இவரின் தயாரிப்பு பெற்றது. சிறப்புகளை கடந்து, தெய்வத்திற்காக உழைக்கிறோம் என்ற பெருமையை சுமந்து நிற்கும் அவரிடம் கேட்ட போது, ""பழநியாண்டவரின் புகழ்பெற்ற  "ராஜ அலங்கார" ஆடையை, வேறு யாரும் தயாரிப்பது இல்லை. நான் தயாரிக்கும் ஆடையை, தண்டாயுத பாணிக்கு அணிவிக்கப்படுகிறது என்பதே, இறைவன் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியமாக  கருதுகிறேன்.  ரூ.1,800 முதல், சுவாமிக்கு அலங்கார ஆடைகள், குடைகள், காவடித் துணிகள் தயார் செய்து, பக்தர்கள் காணிக்கைக்கு வழங்குகிறோம். இறைவனுக்கு  இறைவன் பழநியாண்டவர்; அவருக்கு நான்  தையல்காரன் என்பது, எனக்கு பெருமை தானே சார்... என்றார், பெருமிதமாய்.  நம் எண்ணங்களை, வண்ணமாய் மாற்றும்  இறைவனை, வண்ணமயமாய் மாற்றும் அலங்காரத்திற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இது போன்ற கலைஞர்களை, நாம் வாழும் தருணத்தில் அறிந்து கொள்வது அவசியம். சுவாமி அலங்கார ஆடைகள் தேவையென்றால், 94430 23172ல் தொடர்பு  கொள்ளலாம். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar