Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமதுரை போற்றுவோம் நிறைவு: வைகையில் ... அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை! அப்பூதி அடிகள் நாயனார் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களின் எதிர்பார்ப்பு என்ன?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2013
11:02

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இக்கோயிலுக்கு சொந்தமான சரவணப்பொய்கையிலிருந்து தினம் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அங்குள்ள தண்ணீர் சுகாதார சீர்கேடு அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க கட்டாய வசூல் நடக்கிறது. இதனால் கோயில் வாசல்படிக்கட்டுகளில், காலணிகளை விட்டுச் செல்கின்றனர். கோயிலுக்குள் பிரசாதங்களில் விலை இரண்டு மடங்காக விற்கப்படுகிறது. சனீஸ்வர பகவான் சன்னதியில், எள் விளக்குகளுக்கு ரூ.30 வசூலிக்கின்றனர். கோயிலின் அனைத்து மண்டபங்களிலும் மேல் பகுதியில் ஒட்டடை படிந்துள்ளது. கோயில் மூலஸ்தானத்தில், சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளை இலவச தரிசனத்திற்கு செல்வோர் தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப, அருகிலுள்ள கண்மாய்க்குள் ஆழ்குழாய் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மலைமேல் உள்ள காசி விஸ்வநாதரை தரிசக்கி முடியாமல் பக்தர்கள் செல்கின்றனர். அங்கு ரோப் கார் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மலைக்குப்பின்புறம் தென்பரங்குன்றத்தில் 300க்கும் மேற்பட்ட மயில்களும், அவற்றில் மூன்று வெள்ளை மயில்களை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோயிலுக்குள் லட்சுமி தீர்த்தம் மோசமாக உள்ளது. வைரத் தேரை சீரமைக்க நடவடிக்கை தேவை. கோயில் யானை அவ்வை இறந்து பல மாதங்களாகிறது. யானையின்றியே திருவிழாக்கள் நடக்கிறது. விரைவில் யானை வாங்க ஏற்பாடு செய்ய, புதிய நிர்வாக அதிகாரி பச்சையப்பன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar