Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி ... நந்தியடி சுவாமிக்கு குரு பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோபுர செடிகளை அழிக்க ரசாயன மருந்து தெளிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
11:02

விருத்தாசலம்: தினமலர் செய்தி எதிரொலி காரணமாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசு, ஆலங்கன்றுகள், செடி, கொடிகளை அழிக்க ரசாயன மருந்து தெளிக்கப்பட்டது. விருத்தாசலத்திலுள்ள பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், பிரகார சுவர்களில் அரசு, ஆலங்கன்றுகள், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கோபுரத்தில் வேர்கள் ஊடுருவி விரிசல்கள் ஏற்பட்டதுடன், அதிலுள்ள சிலைகளில் சில பழுதாகி, இடிந்து கீழே விழுந்தன. வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளால் கோபுரத்திற்கும், சுற்றுச் சுவர்களுக்கும் ஆபத்து ஏற்படுமென கடந்த 10ம் தேதி தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சேலம்,  ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் கொண்ட சிவனடியார் குழுவினர், நேற்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து, கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், பிரகார சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை, ரசாயன மருந்து தெளித்து அழிக்கும் பணியில் ஈடுபட் டனர். குழு ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், நாங்கள் பிரதி மாதம் மூன்றாவது  ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உழவாரப்பணி செய்து வருகிறோம். இக்கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அழிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டது. அதைத் தொடர்ந்து விருத்தாசலம் வந்துள்ளோம். ரவுண்டப், அன்மோல், யுனிசால் ஆகிய நச்சு ரசாயன மருந்துகளை தண்ணீருடன் கலந்து செடி, கொடிகள் மீது, ஸ்பிரேயர் மூலம் தெளிக்கிறோம். மருந்தின் நச்சுத் தன்மை இலை மூலம் அடி வேர்கள் வரை பரவி செடிகளை அழித்து விடும். 30 நாட்களுக்குள் செடிகள் கருகி, தானாக விழுந்துவிடும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar