Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி ... நந்தியடி சுவாமிக்கு குரு பூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோபுர செடிகளை அழிக்க ரசாயன மருந்து தெளிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
11:02

விருத்தாசலம்: தினமலர் செய்தி எதிரொலி காரணமாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசு, ஆலங்கன்றுகள், செடி, கொடிகளை அழிக்க ரசாயன மருந்து தெளிக்கப்பட்டது. விருத்தாசலத்திலுள்ள பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், பிரகார சுவர்களில் அரசு, ஆலங்கன்றுகள், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கோபுரத்தில் வேர்கள் ஊடுருவி விரிசல்கள் ஏற்பட்டதுடன், அதிலுள்ள சிலைகளில் சில பழுதாகி, இடிந்து கீழே விழுந்தன. வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளால் கோபுரத்திற்கும், சுற்றுச் சுவர்களுக்கும் ஆபத்து ஏற்படுமென கடந்த 10ம் தேதி தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சேலம்,  ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் கொண்ட சிவனடியார் குழுவினர், நேற்று விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து, கோபுரங்கள், சுற்றுச் சுவர்கள், பிரகார சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை, ரசாயன மருந்து தெளித்து அழிக்கும் பணியில் ஈடுபட் டனர். குழு ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், நாங்கள் பிரதி மாதம் மூன்றாவது  ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசித்தி பெற்ற கோவில்களில் உழவாரப்பணி செய்து வருகிறோம். இக்கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அழிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டது. அதைத் தொடர்ந்து விருத்தாசலம் வந்துள்ளோம். ரவுண்டப், அன்மோல், யுனிசால் ஆகிய நச்சு ரசாயன மருந்துகளை தண்ணீருடன் கலந்து செடி, கொடிகள் மீது, ஸ்பிரேயர் மூலம் தெளிக்கிறோம். மருந்தின் நச்சுத் தன்மை இலை மூலம் அடி வேர்கள் வரை பரவி செடிகளை அழித்து விடும். 30 நாட்களுக்குள் செடிகள் கருகி, தானாக விழுந்துவிடும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar