Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உணவிற்கும் மனித உணர்விற்கும் ... விவேகானந்தரின் 150வது ஜெயந்தி: 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சூரிய நமஸ்காரம்! விவேகானந்தரின் 150வது ஜெயந்தி: 3 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி இரண்டாம் நாள் விழா: இசை மழையில் செம்பை பார்த்தசாரதி கோவில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
10:02

பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோட்டாயி பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழா, நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது; வரும் 22ம் தேதி வரை, இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளில், கொடியேற்றத்தை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல் நாள் இரவு பிரபல பாடகர், பத்மபூஷண் யேசுதாசின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. தொடர்ந்து, முன்னணி கலைஞர்கள் பங்கேற்ற, பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ராமநாதனின் (பிரகாஷ்) சாக்சபோன் இசை கச்சேரியும், 12:00 மணிக்கு, செம்பை வித்யாபீடம் மாணவர்களின் சங்கீத ஆராதனையும் நடந்தது. நேற்று மாலை, 5:30 மணியளவில், புவனா ராமசுப்புவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஹம்ஸத்வனி ராகத்தில், "விநாயகா நினுவினா ப்ரோசுடகு... என்ற பாடலும், பந்துவராளி ராகத்தில், "அர்த்தனாரீஸ்வரி ஆராதனயாமீம் என்ற பாடலும், மத்யமாவதி ராகத்தில், "தர்ம சம்வர்தனே... தனுஜ சம்வர்தனே... என்ற பாடலும், மோகன ராகத்தில், "கோபிகா மனோகரம் பஜே ஹம் கோவர்தனம் சுரவரம்... என்ற பாடலும், இசை பிரியர்களின் செவிக்கு, விருந்தாக அமைந்தன. நேற்று மாலை, பத்மபூஷண் கோபாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், பின், கலாரத்னம் ஜெயன் (ஜெயவிஜயா) ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. ஒருவார ஏகாதசி உற்சவத்தில், மூலவருக்கு ஸ்ரீபூதபலி, பள்ளிவேட்டை, ஆராட்டு, மஞ்சள் நீராடல், பவனி ஊர்வலம் என, தினமும் சிறப்பு வைபவம் நடைபெற்று வருகிறது. விழாவில் செம்பை கோதண்ட ராம பாகவதர், சென்னை என்.ஆர். பத்மனாபன் (அம்பி), சுகுமாரி நரேந்திர மேனோன் உள்ளிட்ட கலைஞர்களின், இசைக் கச்சேரியும் நடைபெற்றன. கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், முன்னணி இசை கலைஞர்கள், இசை பிரியர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar