Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உணவிற்கும் மனித உணர்விற்கும் ... விவேகானந்தரின் 150வது ஜெயந்தி: 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சூரிய நமஸ்காரம்! விவேகானந்தரின் 150வது ஜெயந்தி: 3 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி இரண்டாம் நாள் விழா: இசை மழையில் செம்பை பார்த்தசாரதி கோவில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
10:02

பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோட்டாயி பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழா, நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது; வரும் 22ம் தேதி வரை, இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளில், கொடியேற்றத்தை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல் நாள் இரவு பிரபல பாடகர், பத்மபூஷண் யேசுதாசின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. தொடர்ந்து, முன்னணி கலைஞர்கள் பங்கேற்ற, பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ராமநாதனின் (பிரகாஷ்) சாக்சபோன் இசை கச்சேரியும், 12:00 மணிக்கு, செம்பை வித்யாபீடம் மாணவர்களின் சங்கீத ஆராதனையும் நடந்தது. நேற்று மாலை, 5:30 மணியளவில், புவனா ராமசுப்புவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஹம்ஸத்வனி ராகத்தில், "விநாயகா நினுவினா ப்ரோசுடகு... என்ற பாடலும், பந்துவராளி ராகத்தில், "அர்த்தனாரீஸ்வரி ஆராதனயாமீம் என்ற பாடலும், மத்யமாவதி ராகத்தில், "தர்ம சம்வர்தனே... தனுஜ சம்வர்தனே... என்ற பாடலும், மோகன ராகத்தில், "கோபிகா மனோகரம் பஜே ஹம் கோவர்தனம் சுரவரம்... என்ற பாடலும், இசை பிரியர்களின் செவிக்கு, விருந்தாக அமைந்தன. நேற்று மாலை, பத்மபூஷண் கோபாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், பின், கலாரத்னம் ஜெயன் (ஜெயவிஜயா) ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. ஒருவார ஏகாதசி உற்சவத்தில், மூலவருக்கு ஸ்ரீபூதபலி, பள்ளிவேட்டை, ஆராட்டு, மஞ்சள் நீராடல், பவனி ஊர்வலம் என, தினமும் சிறப்பு வைபவம் நடைபெற்று வருகிறது. விழாவில் செம்பை கோதண்ட ராம பாகவதர், சென்னை என்.ஆர். பத்மனாபன் (அம்பி), சுகுமாரி நரேந்திர மேனோன் உள்ளிட்ட கலைஞர்களின், இசைக் கச்சேரியும் நடைபெற்றன. கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், முன்னணி இசை கலைஞர்கள், இசை பிரியர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar