Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமாட்சியம்மன் கோவிலில் இன்று காலை ... சாரங்கபாணி கோவில் தெப்பம் ஏராளமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரழிந்து வரும் வெண்காட்டீஸ்வரர் கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2013
11:02

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள, சிறப்பு மிக்க வெண்காட்டீஸ்வரர் கோவில் போதிய, பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது.மதுராந்தகம் நகர் கடப்பேரி பகுதியில், புகழ்பெற்ற வெண்காட்டீஸ்வரர் திருகோவில் அமைந்துள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், கி.பி.914 முதலாம் பராந்தகன் மதுராந்தகத்தை உருவாகினான் என்றும், கண்டராதித்த சோழனால், கி.பி.964 இக்கோவில் கட்டப்பெற்றது என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்குதினமும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, ஈசனை வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.பக்தர்கள் அதிகம் இக்கோவில் குளத்தில் நீராடி, வெண்காட்டீஸ்வரரை வணங்கினால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால், பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும், இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரதோஷம், சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி, ஆருத்தரா தரிசனம் உள்ளிட்ட நாட்கள் விஷேசமானவை.வரலாற்று புகழ் பெற்ற இக்கோவில், தற்போது முட்புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. தினந்தோறும் சேகரமாகும், குப்பையை கோவில் வளாகத்திலேயே எரிக்கின்றனர். கோவிலுக்குள்வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், உணவு கழிவுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. பராமரிப்பு இல்லைகோவில் கோபுரத்தில், ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. புனிதமாக கருதப்படும், இக்கோவில் குளம் தூர்வாரப்படாமல், தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது. குளம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், அப்பகுதி மக்கள் இக்குளத்தை அசுத்தம் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கோவிலுக்குள் உள்ள அறைகளில் வவ்வால்கள் சுற்றித்திரிகின்றன. முறையாக பராமரிக்காவிட்டால், கோவில் பாழடைந்து விடும். எனவே, புகழ் பெற்ற இத்திருத்தலத்தை பாதுகாக்க, அறநிலைய துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar