Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலம் கொதிக்கும் நெய்யில் அப்பம் கையால் எடுத்த மூதாட்டி: சிவராத்திரி கொதிக்கும் நெய்யில் அப்பம் கையால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,008 சிவாலய கோயில்களில் மகா சிவராத்திரி: அரசு முதன்மை செயலர் தகவல்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2013
10:03

சிதம்பரம்: ""மகா சிவராத்திரி நாளில் 1008 சிவாலாயங்களில் சிவபுராணம் பாடல், ஆன்மிக உபன்யாசம் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என, நாட்டியாஞ்சலி விழாவில், முதன்மைச் செயலர் ஜவகர் பேசினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி துவக்க விழாவில், அவர் பேசியதாவது: நம் மூதாதையர் ஏற்படுத்திய கோவில்கள், கலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். பரதக்கலை தற்போது, அழிந்து வரும் நிலையில் உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாம் பரத நாட்டியம் பார்க்க வேண்டுமானால் அமெரிக்கா, இத்தாலி, லண்டன் என, வெளிநாடுகளுக்கு சென்று தான் பார்க்க வேண்டி வரும். நடராஜருக்கு நான்கு கைகள். அவரது ஒரு கையில், உடுக்கை; இது, பக்தர்களுக்கு அறிவை ஏற்படுத்தும். மற்றொரு கையில், அக்னி; இது அறியாமையை பொசுக்கும். மூன்றாவது கை, பூமியை நோக்கி இருக்கும்; இது சரணாகதி என பொருள்படும். பக்தர்கள், கடவுளிடம் சரணாகதியடைந்தால் வாழ்க்கையில் இன்பமாகவும், மன நிறைவுடனும் இருக்கலாம் என்பதை, இது உணர்த்துகிறது. நான்காவது கை, அபயஹஸ்தம்; மற்ற மூன்றையும் கடைபிடித்தால், அருள் கிடைக்கும் என, பொருள் அடங்கியுள்ளது.

உலகில் உள்ள நாட்டியக் கலைஞர்கள் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி மேடையில் ஏறி ஆடுவதை பெருமையாகக் கருதுகின்றனர். வரும் ஆண்டுகளில் நாட்டியாஞ்சலி விழாவை ஒன்பது நாட்கள் நடத்த வேண்டும் என அரசு மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் ஜெயலலிதா அனுமதி பெற்று தமிழகத்தில் உள்ள 1008 சிவாலாயங்களில் மகா சிவராத்திரி அன்று சிவபுராணம் பாடல் பாடுவது, ஆன்மிக உபன்யாசம் மற்றும் நாட்டியம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதன்மைச் செயலர் ஜவகர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar