Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோயிலில் மஹா ... 1,008 சிவாலய கோயில்களில் மகா சிவராத்திரி: அரசு முதன்மை செயலர் தகவல் 1,008 சிவாலய கோயில்களில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2013
11:03

ஊட்டி: ஊட்டி காந்தல் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. அன்று மாலை 3:00 மணிக்கு காந்தல் ஆதிபராசக்தி மகளிர் குழுவினர், ஊட்டி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம், காசி விசாலாட்சியம்பாள் மகளிர் குழு சார்பில், திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு மகா பிரதோஷ விழா நடந்தது. நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம், வெண்ணை அலங்காரம், காசி விஸ்வநாத சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம், மாலை 5:30 மணிக்கு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவ மூர்த்தி ஆலயம் வலந்தார். இரவு 7:00 மணிக்கு பிரசாத விநியோகிக்கப்பட்டது. நேற்று காலை 7:00 மணிக்கு காலசாந்தி பூஜை, 11:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. காலை 11:30 மணிக்கு அன்னதானம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை 3:30 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி கோயிலை வலம் வந்தார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு நாத பிரம்ம சங்கீத சபாவின் கர்நாடக சங்கீதம், மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு நகை சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் இடம் பெற்றது. இன்று காலை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar