Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆஞ்சநேய ஸ்வாமி கோயில் மஹா ... கோயிலை புதுப்பிக்க ரூ.50 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ணாரி மாரியம்மன் வீதி உலா துவக்கம் "மாரியம்மா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
11:03

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன் நேற்று காலை முதல் சப்பரத்தில் வீதி உலா சென்றது. அப்போது பக்தர்கள், "மாரியம்மா, மாரியம்மா என கோஷமிட்டு வணங்கினர். சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி மூலம் இக்கோவிலின் இந்தாண்டுக்கான குண்டம் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் புறப்பட்டு சிக்கரசம்பாளையத்துக்கு நேற்று காலை வந்தது. சிக்கரம்பாளையம் பகுதி கிராமங்களில் நேற்று முழுவதும் வீதி உலா சென்றது. அப்போது பெண்கள், "மாரியம்மா என, கோஷமிட்டு சப்பரத்தில் வந்த மாரியம்மனுக்கு குடத்தில் தண்ணீர் ஊற்றியும், தேங்காய், பழம் வைத்து வணங்கினர். பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரையில் படுத்து வணங்கினர். மாலை சிக்கரம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு புதூர் மாரியம்மன் கோவிலில் சப்பரத்துடன் தங்கினர். இன்று (14ம் தேதி) வெள்ளியம்பாளையத்தில் வீதி உலா முடித்துவிட்டு மாலை கொத்தமங்கலம் வழியாக இரவு தொட்டம்பாளையம் சென்று அங்குள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் தங்குகிறது. பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் வீதி உலா செல்லும்போது மலைவாழ் மக்கள் பீனாச்சி வாத்தியம் மற்றும் தாரை, தப்பட்டையுடன் சப்பரத்தின் முன்னால் சென்றனர். நாளை வெள்ளியம்பாளையம் புதூர் கிராமத்தில் ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து விட்டு, இரவு அக்கரைதத்தப்பள்ளி மாரியம்மன் கோவிலில் தங்குகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar