பதிவு செய்த நாள்
19
மார்
2013
11:03
வீரவநல்லூர்: வீரவநல்லூர் சுந்தரராஜபெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 101 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 15ம் தேதி முதல் 17ம்தேதி வரை யாகசாலை பூஜைகள் நடந்தது.மகா கும்பாபிஷேக நாளான நேற்று காலையில் விஸ்வரூப தரிசனம், கோபூஜை, சாந்தி ஹோமம், மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விமானத்திற்கும், மூலவருக்கும் ""கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க மகா கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தில் திரளான மக்கள் பங்கேற்று வழிபட்டனர். மதியம் அன்னதானமும், பெரிய சாற்றுமுறையும் நடந்தது. மாலையில் திருக்கல்யாண உற்சவமும், சுந்தரராஜபெருமாள் வீதி உலாவும் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்எல்ஏ சுப்பையா, வீரவநல்லூர் டவுன் பஞ்.,தலைவர் பழனிச்சாமி, ரோட்டரி இசக்கிசரவணன், பிராமண சமாஜ தலைவர் நாராயணன், முன்னாள் பஞ்., தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் கனகசபாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சென்னை சாந்தி பணி கல்வி மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.