Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் புதிய ஆலய ... வீரவநல்லூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2013
11:03

சென்னிமலை: சென்னிமலை அருகே நஞ்சுண்டஈஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், குளக்கரையில் எழுந்தருளியுள்ளது நஞ்சுண்ட ஈஸ்வரர் கோவில்.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வரும் திங்கள் கிழமைகளில், சென்னிமலை மட்டும்மல்லாது சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், காங்கேயம், திருப்பூர், பெருந்துறை போன்ற வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்வார்கள்.புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்வதுபோல், இப்பகுதியில் பங்குனி திங்கள் கிழமை நஞ்சுண்ட ஈஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். இங்கு எழுந்தருளியுள்ள ஈஸ்வரர், சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். நேற்று பங்குனி மாதப்பிறப்பின் முதல் திங்கள்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிகாலை, 2 மணிக்கு கண்ணன் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. பின், பக்தர்கள் கூட்டம் வர துவங்கியது.கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைத்திருந்தனர். அதையும் கடந்து கூட்டம் வெயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.இக்கோவிலில் பிரசாதமான வெள்ளரிக்காய்களை பக்தர்கள் வாங்கி சென்றனர். வெள்ளரிகாய் கடைகள் கோவில் பகுதிகளில் அதிகமாக அமைந்திருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னிமலை, ஊத்துக்குழியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar