சில குடும்பங்களில் அகால மரணம் ஏற்படலாம், தொடர்ச்சியாக சிலர் இறக்கலாம், பெண்களின் திருமணம் 30 வயதுக்கு மேலாகியும் தடைபடலாம். பார்த்துக் கொண்டிருக்கும் வேலை காரணமே இல்லாமல் பறிபோகலாம். வீண்பழிகள் தேடிவரலாம். என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கிப் போவீர்கள். இதற்கு காரணத்தை ஆய்வு செய்தால், உங்கள் முன்னோர் களில் ஒருவர் கொடிய பாவம் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒன்றாக இருந்த தம்பதியரை பிரித்து இருக்கலாம், பசுவைக் கொன்றிருக்கலாம், பெண்ணை ஏமாற்றி கை விட்டிருக்கலாம். இன்னும் செய்யக்கூடாத செயல்களில் ஏதோ ஒன்றைச் செய்திருக்கலாம். உங்கள் குடும்பத்தில் வயதானவர்களை விசாரித்தால் இதுபற்றிய விபரங்கள் தெரிய வரக்கூடும். சிலர் ஜாதகம் பார்த்தும் இதுபோன்ற சாபங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். இவர்கள் இனியும் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் வீட்டு முன்பு, சிறிய அளவிலான விநாயகர் கற்சிலை ஒன்றை வைத்து தினமும் அருகம்புல் மாலை அணிவித்து, விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம் தண்மையினாற் கண்ணிற்பணிமின் கனிந்து என்று மூன்றுமுறை உருக்கமாகப் பாடுங்கள். விநாயகப்பெருமானே! என் முன்னோர் செய்த பாவங்களுக்காக என் குடும்பத்தை தண்டிக்காதே. எங்களை உன் பிள்ளைகளாகக் கருதி ஏற்றுக்கொள், என உருக்கமாக வேண்டுங்கள். சிலை வைக்கும் இடவசதி இல்லாத பட்சத்தில், தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது பழம் வாங்கிக் கொடுங்கள். விநாயகர் கோயிலுக்குச் சென்று மேற்கண்ட பாடலை மூன்று முறை படியுங்கள். திருச்சி மலைக் கோட்டை உச்சிபிள்ளையாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள். தாயுமான சுவாமி சன்னதியில், நெய் விளக்கேற்றுங்கள். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கி வாருங்கள். எந்த மலைக்கோயிலுக்கு போய் வந்தாலும் சிரமம் நிச்சயம் குறையும்.