Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் இலவச தரிசனத்தில் ... புருஷாமிருக வாகனத்தில் மயிலாப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 மார்
2013
11:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், காலை, 63 நாயன்மார்கள் வீதியுலா மற்றும் இரவு, பிரபல உற்சவமான வெள்ளித்தேர் வீதியுலா, வெகு விமரிசையாக நடந்தது.  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 17ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக, காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து, தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக, கோவில் சன்னிதி தெருவில், பிளாஸ்டிக் பொருட்கள், பாத்திரங்கள், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், பெரிய ராட்டினங்கள், ஐஸ்கிரீம், குல்பி ஐஸ், பானி பூரி, மிளகாய் பஜ்ஜி, அப்பளம், தர்பூசணி, பொரி கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், திருவிழா களை கட்டியுள்ளது. தினசரி, இரவு 12:00 மணி வரை, கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின், ஐந்தாம் நாளான காலை, வெள்ளி அதிகார நந்தி சேவை, இரவு ஸ்ரீகைலாசபீட ராவண வாகனம் உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. ஆறாம் நாளான நேற்று காலை, 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது. ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியுடன், 63 நாயன்மார்களும் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார். இரவு பிரபல உற்சவமான வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், ஏகாம்பரநாதர் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar