Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசி விஸ்வநாதர் கோவிலில் பஞ்ச ... உலகெங்கும் பாசத் திருவிழா.. ஹோலிப் பண்டிகை கோலாகலம்! உலகெங்கும் பாசத் திருவிழா.. ஹோலிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் குவியும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2013
11:03

ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் கம்பத்துக்கு, புனிதநீர் ஊற்றி பக்தர்கள், அம்மனை தரிசித்தனர். ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்கள் குண்டம் திருவிழா, மார்ச், 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. மார்ச், 23ம் தேதி இரவு, 8.30க்கு, பட்டாளம்மன் சிறப்பு அபிஷேகத்துடன், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது. நேற்று, ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் இருந்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பெரியமாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பங்களுக்கு, புனித நீர், பால் ஊற்றி, சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்த அம்மனை வழிபட்டு சென்றனர். பெரியமாரியம்மன் வகையறா கோவில் பண்டிகையை முன்னிட்டு, மூன்று கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் நீர்மோர் பந்தல், கூழ் வழங்கப்பட்டது. ஈரோடு அ.தி.மு.க., சார்பில், பெரியமாரியம்மன் கோவில் முன், மோர், கரும்பு, ரஸ்னா, தர்பூசணி என, 19 வகையான நீர் ஆகாரங்கள் வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் பங்கேற்று, நீர்மோர் பந்தலை துவக்கி வைத்தார். துணைமேயர் பழனிசாமி, மண்டல தலைவர்கள் மனோகரன், கேசவமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஈரோடு ஜவுளி பேக்கிங் லேபர் யூனியன் சார்பில் பக்தர்களுக்கு, மூவகையான சாப்பாடு அன்னதானம் வழங்கப்பட்டது. 26வது வார்டு கவுன்சிலர் பாஸ்கரன், யூனியன் பொது செயலாளர் சம்பத், துணை செயலாளர் பாலசுப்ரமணி, துணைதலைவர் செல்வராஜ், பொருளார் மோகனசுந்தரம், பாசளை மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாளில் பல்லக்கு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் பூச்சொரிதலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே திருத்தலம் என, ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar