Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ... ஏப்ரல் 7 தண்டியடிகள் நாயனார் குருபூஜை! ஏப்ரல் 7 தண்டியடிகள் நாயனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீர்மலை கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஏப்
2013
10:04

திருநீர்மலை:திருநீர்மலை கோயிலில், பங்குனி பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான ஏப் 5,, நீர்வண்ணர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில், வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில், பங்குனி விழா பிரம்மோற்சவம், கடந்த மாதம், 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், பல்லக்கு, சேஷ வாகனம், கருட வாகனத்தில், நாச்சியார் திருக்கோலத்தில், நீர்வண்ண பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின், 8ம் நாளான ஏப் 5,, காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், நீர் வண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிந்தாதிரிப்பேட்டை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள, ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில், ரத உற்சவம் நடந்தது. இந்தக் கோயிலில், மார்ச், 27ம் தேதி துவங்கிய பிரம்மோற்சவ விழா, ஏப்., 6ம் தேதி வரை, கோலாகலமாக நடக்க உள்ளது. ரத உற்சவத்தை முன்னிட்டு, ஏப் 5, காலை, 6:00 மணிக்கு, ஆதிகேசவப் பெருமாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்கார தரிசனமும் நடந்தது. அதை தொடர்ந்து, முக்கிய விதிகளில், பெருமாள் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூ, வாழை பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, காணிக்கை செலுத்தி,வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar