Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுந்தரராஜ பெருமாள் பிரம்மோற்சவ ... அருணாபுரம் கோவிலில் கூத்தாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூடாமணியம்மன் தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
11:04

ராசிபுரம்: கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, தொன்று தொட்டு நடந்து வரும் முகாம் நீதிமன்றத்தில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டியில், பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்வாமி அன்னம், சிம்மம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை, 9 மணிக்கு, ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துசாமி, அறநிலையத் துறை இணை கமிஷனர் மங்கையர்கரசி, நாமகிரிப்பேட்டை யூனியன் சேர்மன் பொன்னுசாமி, புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணி, கோவில் செயல் அலுவலர் ராஜாராம், பரம்பரை அறங்காவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, பாலசுந்தரம் உளிளிட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, உருளுதண்டம் போட்டபடி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்துவரப்பட்டது. திருவிழாவையொட்டி, ஆங்கிலேயர் காலம் முதல் தொன்று தொட்டு நடந்து வரும் முகாம் நீதிமன்றம், புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. ராசிபுரம் குற்றவியல் நீதிபதி முத்துசாமி தலைமை வகித்தார். அதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது உள்பட, 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, 22 ஆயிரத்து 900 ரூபாய் அபாரதம் வசூல் செய்யப்பட்டது. இன்று (ஏப்., 11) இரவு, 7 மணிக்கு ஸ்வாமி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், திருவீதி உலா வந்து சத்தாபரண நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar