மதுரை: மதுரை கூடல்நகர் அசோக்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்., 23ல் நடக்க உள்ளது. அன்று காலை 6 க்கு அனுக்ஞை, பாலிகை தெளித்தல், காப்பு கட்டுதல், 7 மணிக்கு ஊஞ்சல் பஜனை பாடல் இடம்பெறும். 7.30 மணிக்கு மாலை மாற்றுதல், கன்னிகாதானம், ஹோமம், 8 மணிக்கு திருமாங்கல்யதாரணம், பாணிக்ரஹணம், 9 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். ஏற்பாடுகளை பாஸ்கர வாத்தியார் செய்து வருகிறார்.