பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
11:04
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் 28ம் ஆண்டு பெருவிழா இன்று துவங்குகிறது. இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலின் 28ம் ஆண்டு பெருவிழா இன்று (15ம் தேதி) துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு துவஜாரோகணம், காப்பு கட்டுதல் நடக்கிறது. 19ம் தேதி நாகாத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவம், இரவு விநாயகர், நாகாத்தம்மன், பாலமுருகன் சுவாமிகள் மின் அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 21ம் தேதி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 23ம் தேதி நாகாத்தம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 8.15 மணிக்கு சுந்தர÷சுவருக்கும், மீனாட்சி அம்மைக்கும் திருக்கல்யாண உற்சவம், இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர், விழாக் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.