Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழவல்லநாடு கோயிலில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2013
11:05

வல்லநாடு: கீழவல்லநாடு மலை அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சலசுவாமியின் நூதன கோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கீழவல்லநாடு மலையில் விநாயகர், அபிதகுஜலம்பாள், அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருணாச்சல சுவாமிக்கு தனித்தனியாக கோயில்கள் அமைக்கப்பட்டது. அருணாச்சலசுவாமிக்கு சிலையும் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டது. விமானமும், கருவறை, சிற்ப வடிவங்களும் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் நடந்தது. கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 5ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும் மாலையில் 3ம் கால யாகசாலை பூஜை வேதபாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, இரவில் யந்திரஸ்தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6ம் தேதி காலை 4ம் கால யாகசாலை பூஜை, திரவியாகுதி, ஸ்பரஸாகுதி, யாத்ராதானம்,
வேதபாராயணம் மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. காலையில் கும்பம் எழுந்தருளலும், தொடர்ந்து விநாயகர், அபிதகுஜலம்பாள், அருணாச்சலேஸ்வரர், அரு ணாச்சலசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், விமானத்திற்கும் புதிய சிலைகளுக்கும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் சங்கரானந்தா மகராஜ் சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 63 சிவனடியார்கள், கீழவல்லநாடு பஞ்.,தலைவர் சுரேஸ்காந்தி, எல்லைநாயக்கன்பட்டி பஞ்.,தலைவர் கண்ணன், வல்லநாடு பஞ்.,தலைவர் கொம்பம்மாள் ராமசாமி, பரமசிவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை வல்லநாடு வெங்கிடசுப்பிரமணியன், ரவி குசூவினர் செய்தனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ராமச்சந்திரன், இசக்கிமுத்து மற்றும் கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar