Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் ... ஒழலூர் வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றம் அகத்தியர் தீர்த்த குளம் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
11:05

திருக்கழுக்குன்றம்: அகத்தியர் தீர்த்த குளம், போதிய பராமரிப்பின்றி தூர்ந்துள்ளதால், சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட, வேளாளர் தெருவில், அகத்தியர் தீர்த்த குளம் அமைந்துள்ளது. பல்வேறு வரங்களை பெறுவதற்காக, அகத்தியர், இறைவனை வேண்டி தவம் செய்ததால், இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என, பெயர் பெற்றது. மேலும், சுந்தர மூர்த்தி நாயனார், வேதகிரீஸ்வரர் பெருமானை தரிசிப்பதற்காக, இக்குளத்தில் மூழ்கி எழுந்தபோது, சிவபெருமான் அவருக்கு நேரடியாக காட்சியளித்ததாக, வரலாற்று குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இதன் நினைவாக, வேதகிரீஸ்வரரின் சித்திரை திருவிழாவின், நான்காம் நாள் உற்சவத்தில், வேதகிரீஸ்வரர், தெற்கு ராஜகோபுரம் வழியாக வந்து, இக்குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி, சுந்தரருக்கு பொற்றாளம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்தகைய புகழ்பெற்ற இக்குளம், தற்போது, ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, புதர் மண்டி தூர்ந்துள்ளது. சீரமைக்கப்படுமா? இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், "புனிதமான இக்குளத்தில், ஏராளமான சாதுக்கள் மற்றும் வெளிமாநில சாதுக்கள் நீராடி, வேதகிரீஸ்வரரை தரிசிப்பது வழக்கம். ஆனால், இதனை முறையாக பராமரிக்காததால், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி சீரழிந்துள்ளது. இதனால், குளம் முற்றிலும் தூர்ந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar