பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
கும்பகோணம்: நூற்று எட்டு வைணவ திவ்ய தேசங்களில், சோழநாட்டு திருப்பதிகளில், 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் எனும் நாதன்கோயில் சேத்திரமாகும். கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில், கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை, பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு, பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாகச் சிறப்பிக்கப்பட்டு தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற இத்தலத்தில், வைகாசி பிரம்மோத்சஸம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி வரும், 24ம் தேதி காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, 24ம் தேதி சந்திரபிரபை வாகனத்திலும், 25ம் தேதி ஹம்ச வாகனத்திலும், 26ம் தேதி சேஷ வாகனத்திலும், 27ம் தேதி கருடசேவையும், 28ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி யானை வாகனத்திலும், ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக வரும், 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 31ம் தேதி குதிரை வாகனத்தில் திருவேடுபரி திருமங்கை ஆழ்வார் புறப்பாடு நடைபெற உள்ளது. வரும், 1ம் தேதி காலை, 7 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருளலும், பின், 9 மணிக்கு தேர் வடம் பிடித்த லும், 12 மணிக்கு கொடியி றக்கமும், 2ம் தேதி சப்தாவர்ண புறப்பாடு, 3ம் தேதி புஷ்பயாகமும் நடக்கிறது.