Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழைபெய்ய வேண்டுதல் சுவாமிமலையில் ... பட்டமங்கலத்தில் மே 26 ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகநாதபெருமாள் கோவிலில் வைகாசி விசாக கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2013
11:05

கும்பகோணம்: நூற்று எட்டு வைணவ திவ்ய தேசங்களில், சோழநாட்டு திருப்பதிகளில், 40ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் எனும் நாதன்கோயில் சேத்திரமாகும். கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில், கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை, பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு, பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாகச் சிறப்பிக்கப்பட்டு தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற இத்தலத்தில், வைகாசி பிரம்மோத்சஸம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி வரும், 24ம் தேதி காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, 24ம் தேதி சந்திரபிரபை வாகனத்திலும், 25ம் தேதி ஹம்ச வாகனத்திலும், 26ம் தேதி சேஷ வாகனத்திலும், 27ம் தேதி கருடசேவையும், 28ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி யானை வாகனத்திலும், ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்வாக வரும், 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 31ம் தேதி குதிரை வாகனத்தில் திருவேடுபரி திருமங்கை ஆழ்வார் புறப்பாடு நடைபெற உள்ளது. வரும், 1ம் தேதி காலை, 7 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருளலும், பின், 9 மணிக்கு தேர் வடம் பிடித்த லும், 12 மணிக்கு கொடியி றக்கமும், 2ம் தேதி சப்தாவர்ண புறப்பாடு, 3ம் தேதி புஷ்பயாகமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar