Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈரோடு ஆஞ்சநேயர் கோவிலில் குரு ... திருப்பரங்குன்றம் கோயிலின் உப கோயில்களில் கும்பாபிஷேகம் திருப்பரங்குன்றம் கோயிலின் உப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடியில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை: பரிகார ராசியினருக்கு அழைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

திருவாரூர்: ஆலங்குடியில், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையில், பரிகார ராசியினர், பங்கேற்கலாம் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில், குரு பெயர்ச்சி விழா, நடந்து வருகிறது. இங்கு, இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை விழா, நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, கடந்த, 16ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை நடந்தது. நேற்று முன் தினம், குரு பெயர்ச்சியையொட்டி, இரண்டாம் கட்டமாக, குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை, இன்று, 30ம் தேதி முதல், வரும், 6 ம் தேதி வரை நடக்கிறது.

இது குறித்து, கோவில் உதவி ஆணையர், சிவராம்குமார் கூறியதாவது: குரு பெயர்ச்சி லட்சார்ச்சனையில் பங்கேற்க விரும்புவோர், 400 ரூபாய் மணியார்டர் அல்லது, "டிடியாக உதவி ஆணையர், செயல் அலுவலர், ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவில், ஆலங்குடி - 612 801, வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது, ஆலங்குடி சிட்டி யூனியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 068001000293822 க்கு பணம் செலுத்தி, விவரங்களை அனுப்பினால், குரு பகவான் உருவம் பொறித்த, வெள்ளி டாலர் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, சிவராம்குமார் தெரிவித்தார்.

ஸ்தல அர்ச்சகர், ஜோதி சிவராமலிங்க சிவாச்சாரியர் கூறியதாவது: குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு, 28ம் தேதி இரவு, 9:10 மணியில் இருந்து, 10:00 மணிக்கு பிரவேசித்தார். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ராசியினர், கட்டாயம் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. ஆலங்குடி, குரு பகவான் கோயிலில், இன்று முதல், 6 ம் தேதி வரை, காலை, 9:00 மணியில் இருந்து 12:00 மணி வரையிலும், மாலை, 4:30 மணியில் முதல் இரவு, 8:00 மணி வரையிலும், குரு லட்சார்ச்சனை விழா நடக்கிறது. இதில், பரிகார ராசியினர் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, நிலக்கல் பகுதியில் மேம்பட்ட சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar