Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ... அம்மன் தர்பார் ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தாளநல்லூர் கோயிலில் அஷ்டபந்றதன மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
11:05

வீரவநல்லூர்: வேதகோஷங்கள், மேளதாளங்கள் முழங்கிட நடந்த அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு கழித்தனர். மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்றதும், கஜேந்திர மோட்ச தீர்த்த கட்டமுமான அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு புதிய 5நிலை ராஜகோபுரம் நிர்மானிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நாளான நேற்று (29ம் தேதி) அதிகாலை விஸ்வரூபம், உற்சவ மூர்த்திகள் ஏகாந்த திருமஞ்சணம், யாகசாலை ஹோமங்கள், திவ்ய பிரபந்தம், வேதபாராயணம், மகா பூர்ணாகுதி, திருவாராதனம், யாத்ராதானத்தை தொடர்ந்து புதிய ராஜகோபுரம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் விமானம் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் பக்தி கோஷங்கள் முழங்க மேளதாளத்துடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் வீரவநல்லூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நெல்லை எம்பி., ராமசுப்பு, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் கண்ணதாசன், தக்கார் வைரவன், ஆய்வாளர் கணேஷ் வைத்தியலிங்கம், நிர்வாக அதிகாரி அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பணி ஏற்பாடுகளை சென்னை ஆர்.ஏ.கே. அறக்கட்டளையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சேரை., டிஎஸ்பி மேற்பார்வையில் வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக வழிபட படுகிறது. பார்வதி தேவி இரவு முழுவதும் ... மேலும்
 
temple news
கடலுார் ; கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் மகா சனிப்பிரதோஷத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவம் வரும் 21ம் தேதி காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar