Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹஜ் புனித பயணத்திற்கு தேர்வான 200 ... வேடியப்ப ஸ்வாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் கோவில்களில் "களை கட்டிய திருமணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2013
10:06

சேலம்: வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால், நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், திருமண நிகழ்ச்சிகள் களை கட்டியது. ஒவ்வொரு சமூகத்தினரும், திருமண விழாக்களை தங்களுக்கு விருப்பமான கோவில்களில் நடத்துவது வழக்கமாகும். முகூர்த்த நாளில், பிரசித்தி பெற்ற கோவில்களில், திருமண விழா நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு, சிரமம் ஏற்படும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, திருமணங்களை நடத்தலாம். நேற்று வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளாகும். வளர்பிறை முகூர்த்தம் என்பதால், சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், திருமண நிகழ்ச்சிகளை நடத்த ஏராளமானோர் முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தனர். சேலம் கோட்டை பெருமாள் கோவிலில், பத்து திருமணம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 55 திருமணம், உத்தம சோழபுரம் கரபுர நாதர் கோவிலில், 60 திருமணம், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், 104 திருமணம் நடந்தது. மேலும், சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், தனியாருக்கு சொந்தமான பரம்பரை கோவில்கள் ஆகியவற்றிலும், ஏராளமான திருமணங்கள் நடந்தது. திருமணத்துக்கு வந்த உறவினர்களோடு சேர்ந்து, பக்தர்களும், மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். திருமண நிகழ்ச்சிகளால், திருவிழாக்களை போல, அனைத்து கோவில்களும் களை கட்டியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar