Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை : ... முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளா கும்பமேளா: திருநாவாய பாரதப்புழை நதியில் சுப்ரமணிய பூஜை
எழுத்தின் அளவு:
கேரளா கும்பமேளா: திருநாவாய பாரதப்புழை நதியில் சுப்ரமணிய பூஜை

பதிவு செய்த நாள்

24 ஜன
2026
10:01

பாலக்காடு: திருநாவாய பாரதப்புழை நதியில் நடைபெறும், கேரளா கும்பமேளாவில் இன்று சுப்ரமணிய பூஜை நடக்கிறது.


கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில், கங்கையின் புண்ணியத்தைத் தேடி, கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பிப். 3ம் தேதி கும்பமேளா நிறைவடையும் வரை, தினமும் காலையில் நிளா நதியில் புனித நீராடலாம்.


இந்நிலையில், மகாமகம் மஹோற்சவத்தின் ஒரு பகுதியாக பஞ்சமி நாளான நேற்று சதுராம்பிகா பூஜை நடைபெற்றது. பாரதப்புழா ஆற்றைப் பாதுகாப்பதற்காக பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திக் பாலக தேவதைகளான சதுராம்பிகா தேவியர்களை வழிபடுவதே இந்தப் பூஜையின் சிறப்பாகும். ஆச்சார்யார் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இன்று, யாகசாலையில் சுப்ரமணிய பூஜை நடக்கிறது. அதிகாலையில் தொடங்கும் இந்தப் பூஜை சுப்ரமணியப் பெருமானின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது. ஆச்சார்யார் உமேஷ் தலைமையில் பாலசுப்பிரமணியன், தண்டாயுதபாணி, சுப்ரமணியன் என மூன்று நிலைகளாக இந்தப் பூஜை நடைபெறும். மாலையில் யாகசாலையில் யக் ஷி பூஜை நடைபெறும். ரத சப்தமி நாளான நாளை (25ம் தேதி) புனித நெருப்பின் வடிவமான பிரத்யங்கிரா தேவியை போற்றும், பிரத்யங்கிரா பூஜை நடைபெறும். காலையில் அட்சர பிரத்யங்கிராவுக்கும், மாலையில் உக்ர பிரத்யங்கிராவுக்கும் பூஜைகள் நடைபெறும். ஆச்சார்யார் சதீஷ்பாபு தலைமையில் இந்தப் பூஜைகள் நடைபெறும்.திருநாவாய் மகாமகம் மஹோற்சவத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவின் பல்வேறுமாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநி லங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள்திருநாவாய்க்கு வந்த வண்ணம் உள்ளனர். அதிகாலை முதலே கடும் கூட்டம் நிலவுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar