Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக ... கேரளா கும்பமேளா: திருநாவாய பாரதப்புழை நதியில் சுப்ரமணிய பூஜை கேரளா கும்பமேளா: திருநாவாய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை : திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
கருப்பு நிறத்தில் மாறிய கடற்கரை : திருச்செந்துாரில் பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

24 ஜன
2026
10:01

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கோவில் முன்புள்ள கடற்கரையில் நேற்று காலை சில பகுதிகள் மட்டும் கருப்பு நிறத்தில் மாறியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடலின் நிறமும் காலை நேரத்தில் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது. சில மணி நேரத்திற்கு பின் கடல் உள்வாங்கி காணப்பட்டது.


பக்தர்கள் கூறியதாவது: திருச்செந்துார் அருகே உடன்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதற்கான நிலக்கரி இறங்குதளம் கல்லாமொழி அருகே கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அனல் மின்நிலைய சோதனை ஓட்டத்தின் காரணமாக நிலக்கரி துகள்கள் கடலுக்குள் விடப்பட்டு, அதனால் கடலில் இருந்து மணல்கள் கருப்பு நிறத்தில் மாறி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கடற்கரையில் தேங்கியுள்ள கருப்பு நிற மண்ணை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வரும் காலத்தில் கடலுக்குள் நிலக்கரி கழிவுகள் கொட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar