பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா ஜூலை (2ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நெல்லை ஜங்ஷன் வரதராஜப் பெருமாள் கோயிலில் 55 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் விழா பிரமாண்டமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்துவருகிறது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா வரும் ஜூலை 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 1ம் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் மற்றும் அலங்கார தீõராதனைகள் நடக்கிறது. தினந்தோறும் அன்னபட்சி வாகனம், சிங்க வாகனம், அனுமார் வாகனம், ஷேச வாகனம், யானை வாகனம், புன்னை மரம் வாகனம், குதிரை வாகனம், வெள்ளி பல்லக்கு, தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா, தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கு ஆகிய வாகனங்களில் பெருமாள் எழுந்தருளலும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.