மேல்மலையனூர் கோவிலில் வருண பகவானுக்கு சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2013 11:07
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்ப யாகம் நடந்தது. கலச பிரதிஷ்டை செய்து, விநாயகர், லட்சுமி பூஜைகள் செய்தனர். விசேஷ திரவியங்களை கொண்டு யாகம் நடத்தினர். யாகத்தின் முடிவில் கலச நீரை கொண்டு அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சின்னதம்பி, அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.