பிரத்தியங்கிரா கோவிலில் நிகும்பலா யாகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2013 10:07
மயிலாடுதுறை: கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் மகா பிரத்தியங்கிரா தேவி கோ வில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூசித்து வேண்டிய வரங்களை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்த ப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தங்களது ஆசைகளை விட்டு இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை சரணடைந்தால் தோஷ ங்கள் மற்றும் சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ் வர்யங்களையும் பெறுவர். ஆணி மாத அம்மாவாசையான நேற்று காலை மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அம் பாளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டன. மதியம் 12:30 மணிக்கு மெலட்டூர் ஐயப்ப சிவாச்சாரியார் யாகத்தில் மிளகா ய் வற்றல் கெ õட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமா ன பக்தர்கள் கலந்து கொண்டு மகா பிரத்தியங்கிரா தேவியை பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத் திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. நாச்சியார்கோவில் போலீஸ் மற் றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.