மதுரை: மதுரை அரசு தலைமை ஹாஜியார் சையத் காஜா முகையீனுத்தீன் அறிக்கை: புனித ரமலானையொட்டி இன்று (ஜூலை 9), ஷாபான் பிறை 29 நிறைவு பெறுகிறது. மாலையில் புனித ரமலான் பிறை தெரிய வாய்ப்புள்ளது. பருவநிலை காரணமாக பிறை ஊர்ஜிதம் செய்வதில் தாமதமாகலாம். எனவே, பிறை பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்கள், அதனை 0452- 233 7070ல் உடனடியாக தெரிவிக்க வேண்டும், என்றார்.