Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் வாகன வெள்ளோட்டம்: மன்னர் ... புனித ரமலான் பிறை: ஹாஜியார் அறிவிப்பு! புனித ரமலான் பிறை: ஹாஜியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மரங்களுக்கு திருமணம் செய்து வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
10:07

காரைக்கால்: காரைக்காலில் குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க, வேப்பம், அரசமரத்திற்கு (அஸ்வத்த விவாகம்) திருக்கல்யாணம் செய்து வைக்கும், நூதன வழிபாடு நடந்தது. காரைக்கால் கோட்டுச்சேரி தலத்தெருவில் சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே அரச மரமும், வேப்பமரமும் இணைந்து வளர்ந்துள்ளது. அரச மற்றும் வேப்ப மரத்தை சுற்றிவந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அமவாசை தினமான நேற்று முன்தினம், திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்க வேண்டியும், வேப்பம் மற்றும் அரச மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து நூதன வழிபாடு நடந்தது. அரச மரத்தை சிவனாகவும், வேப்ப மரத்தை அம்பாளாகவும் பாவித்து திருமண நிகழ்ச்சிகள் நடந்தது.

Default Image
Next News

முன்னதாக, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, புனித நீரால் வேப்பம், அரச மரத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, மணமகள் வேப்ப மரத்திற்கு புதிய புடவை போர்த்தப்பட்டும், மணமகனான அரச மரத்திற்கு பட்டு வேட்டி கட்டி, வேப்பம் மரத்திற்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் வேப்பம், அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உபயதாரர்கள் கூறுகையில், கடந்த 2005ம் ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட அஸ்வத்த விவாகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு, திருமணம் நடந்து முடித்துவிட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: வளர்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar