பெண்ணாடம்: சவுந்திரசோழபுரம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆனி மாத அமாவாசையொட்டி பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணியளவில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில், புஷ்ப அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.