புனித ரமலான் மாதம் துவங்கி விட்டது. இறைநம்பிக்கையாளர்களின் உள்ளம் பூரித்துப் பொங்கியிருக்கிறது. பள்ளிவாசல்களிலும், வீடுகளிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகி ஓடுகிறது. இந்த மாதத்தை "கண்ணியம் நிறைந்த மாதம் என்றார்கள் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். "ஷஹ்ரே அஜீம் என்று அவர்கள் குறிப்பிட்டது இதைத் தான். அது மட்டுமா! "ஷஹ்ரே முபாரக் என்றும் அவர்கள் இம்மாதம் பற்றி சொல்கிறார்கள். அப்படியானால் என்ன! " இது அருள் வளம் நிறைந்த மாதம் என்று பொருள். இந்த மாதத்தில் மகத்தான இரவு ஒன்று வருகிறது. அந்த இரவின் மகத்துவம் அளவிடற்கு அரி யது. "ஆயிரக்கணக்கான மாதங்களுக்கான அருள்வளத்தின் புதையல் என்று அந்த இரவைச் சொல்வார்கள். அந்த இரவில் தான் இறைவன் தன்னுடைய மிகப்பெரும் அருளை இறக்கிவைத்தான்." " நாம் இதனை- தெளிவான வேதத்தினை- அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம் என்று திருக் குர் ஆன் குறிப்பிடுவது இந்த இரவு பற்றி தான். அதே நேரம், இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமானதே. ஒவ்வொரு இரவும் அருள் வளம் மிக் கதே. இந்த அரிய மாதத்தில், ஏக இறைவனைப் பிரார்த்தித்து, மகிழ்ச்சியுடன் நோன்பைத் துவக்குவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20.