Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி சிறப்பு வழிபாடு உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரை துவங்கியது! உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாத் ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதிசய பனிமாதாஆலயத்தில் 27ம் தேதி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2013
11:07

வள்ளியூர்: தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய 128வது ஆண்டு திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. தெற்குகள்ளிகுளும் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 128வது ஆண்டு திருவிழாவாக வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலையில் முதல் திருப்பலியும், பின்பு திருயாத்திரையுடன் திருப்பலியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கோயில் தர்மகர்த்தா ஆனந்தராஜா தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது.அதனை தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலை 6.30 ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.8ம் திருவிழாவான வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியான புது நன்மை தினம் நடக்கிறது. மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் யுவான் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது.9ம் திருவிழாவான 4ம் தேதி மாலையில் பாளை., மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மறுநாள் காலை 5.30 மணிக்கு திருவிழா கூட்டு திருப்பலி பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஆனந்தராஜா, பங்குதந்தை அந்தோணிதாஸ் அடிகளார், உதவி பங்குதந்தை செல்வரத்தினம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்கத்தினர், தெற்கு கள்ளிகுளம் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar