Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! கொழுந்துமாமலை முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவனணைந்த பெருமாள் கோயிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
10:07

ஆழ்வார்குறிச்சி: திருமலையப்பபுரம் சிவனணைந்தபெருமாள் கோயிலில் வரும் 14ம்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. திருமலையப்பபுரத்தில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சிவனணைந்தபெருமாள் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (12ம் தேதி) காலை 5 மணி முதல் மகா கணபதி ஹோமம், புண்ணியாகம், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், கோபூஜை, கஜபூஜை, பிரம்மசாரி பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியனவும், மாலை 4 மணி முதல் தீர்த்தம் அழைத்து வருதல், குடி அழைப்பு, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, காப்பு கட்டு, கலா கர்ஷணம், 1ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. நாளை (13ம் தேதி) காலை 8 மணி முதல் 2ம் கால யாகசாலை பூஜை, ஸ்ரீ ருத்ரம் ஜெயம், ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் சயபானதி வாசகம், மாலை 6 மணி முதல் 3ம் கால யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது.

கும்பாபிஷேக நாளான வரும் 14ம்தேதி காலை 7 மணி முதல் 4ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், ஸ்பர்ஸாகுதி, திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்படுதலும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் செல்வ விநாயகர், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 15ம்தேதி முதல் ஆக.25ம்தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து வரும் ஆக.30ம்தேதி கால் நாட்டுதல் வைபவம், வரும் செப்.5ம்தேதி முதல் 7ம் தேதி முடிய கொடை விழாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை திருமலையப்பபுரம் யாதவ சமுதாயத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar