Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இப்படி ஒரு ஊரா! ராம, கிருஷ்ண அவதாரத்தைப் போல பிற ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
03:07

*போதுமென்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் வேறில்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறில்லை.
*வாழ்வில் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், அவை நிலைத்து நிற்பதில்லை. பாலத்தின் அடியில் ஓடும் நீரைப் போல, அவை உன்னை விட்டு ஓடி விடும்.
*துன்பம் நேர்ந்தால் கண்ணீர் மல்க கடவுளை வேண்டு. உன் மனவேதனையைப் போக்கி நிம்மதியை நிச்சயம் அவர் அளிப்பார்.
*உன் உள்ளத்தை கடவுளிடம் திறந்து காட்டி, கடவுளே! என்னை உன் பக்கம் இழுத்துக் கொள்! எனக்கு அமைதியைத் தந்தருள்வாய் என்று அன்றாடம் பிரார்த்தனை செய்.
*ஒரு மனிதனிடம் நம்பிக்கை இருக்குமானால், அந்த நம்பிக்கையே அவனது குறிக்கோளை எட்டச் செய்து விடும்.
*அன்பின்றி கடவுளை அறிய முடியாது. உண்மையான அன்பையே கடவுள் நம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
*சாதிக்க முடியாதது என்று உலகில் எதுவுமில்லை. பக்தியின் மூலமாக எதையும் சாதிக்க முடியும்.
*ஆசை இருக்கும்வரை மனிதனைப் பிறவி தொடர்ந்து கொண்டிருக்கும். கற்கண்டு சாப்பிட வேண்டும் என்ற சிறிய ஆசை கூட பிறவிக்கு காரணமாகி விடும்.
*ஆசைப்படுவதாக இருந்தால் ஆசையற்ற தன்மைக்கு ஆசைப்படு. ஏனெனில் ஆசையே, துன்பத்திற்கான மூலகாரணம்.
*உலகில் இன்பம் என்பது வெறும் வார்த்தையளவில் தான் இருக்கிறதே ஒழிய, உயிர்கள் உண்மையான இன்பத்தை அனுபவிப்பதில்லை.
*சோம்பலால் அன்றாடப்பணிகள் கூட பாதிக்கும். அதனால், விடாமுயற்சியும், மனஉறுதியும் கொண்டிருப்பது மிக அவசியம்.
*பலவிதமான எண்ணங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே. ஏனெனில், ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதே இந்த காலத்தில் கடினமானதாகி விட்டது.
*யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும். நீ எதைச் சரியென்று நினைக்கிறாயோ அதில் துணிவுடன் ஈடுபடு. துணிந்த பின் துயரம் வந்தாலும் அதை உதறி விடு. இவ்விஷயத்தில் கடவுளை மட்டும் துணைக்கு அழைத்துக் கொள்.
*எல்லாம் இந்த மனதைப் பொறுத்தது தான். மனம் தூயதாக இருந்தால் காணும் அனைத்தும் தூய்மையானதாகிவிடும்.
*வேலையில் அக்கறையோடு ஈடுபடு. மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க இதுவே சிறந்த வழி.
*கடவுளின் திருநாமத்தை பக்தியோடு உச்சரித்தால் மனம், உடல் இரண்டுமே தூய்மை பெறுகிறது.
*பகலும் இரவும் சேரும் மாலைநேரம் வழிபாட்டிற்கு உகந்தது. அந்த நேரத்தை அன்றாட வழிபாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்.
*தியானத்தை முறையாகப் பயின்று வந்தால் மனம் ஒருமுகப்படும். பலமணி நேரப் பிரார்த்தனையை விட, இரண்டு நிமிட தியானம் சிறந்தது.
*நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது பெரும்பேறு. இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் கடவுள் மீது முழுமையாக பக்தி செலுத்து.
-சொல்கிறார் குருமாதா

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar