பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
10:07
திருவாரூர்: திருவாரூர் கீழ வீதியில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சோழர் கால கைலாசநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. திருவாரூர் கீழவீ தியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட, மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல், ஆக்கிரப்பில் சிக்கி இருந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கைக்குப் பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவிலை புதுப்பிக்க, ஆன்மிகவாதிகள் சிலர், முன்வந்ததையடுத்து, குழு அமைத்து, கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு தீபாராதனை நடந்தது.