பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
பொங்கலூர்: ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள், மழை பெய்ய வேண்டி, வீடுகளுக்கு சென்று மழைசோறு எடுத்து வழிபட்டனர். பொங்கலூர் பகுதியில் விவசாயம் பிரதானமாக உள்ளது. மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மழை பெய்ய வேண்டி, பொங்கலூர், ஆண்டிபாளையத்தை சேர்ந்த பெண்கள், நேற்று, வீடு வீடாக சென்று, பழைய சோறை, மண் பானைகளில் வாங்கி வந்தனர். மழை பொய்த்து விட்டதாக, ஒப்பாரி வைத்து பாடிய பெண்கள், ஊர் எல்லைக்கு கூட்டமாக சென்றனர். ஊர் எல்லை வரை சென்ற அவர்களை,
ஆண்கள் சமாதானப்படுத்தி, "மழை பெய்து வளம் செழிக்கும், என்று கூறி, திருப்பி அழைத்து வந்தனர். பெண்கள் வாங்கி வந்த பழைய சோற்றை கலந்து, அனைவரும் சாப்பிட்டனர். விரைவில், மழை பெய்ய வேண்டும், என, வருண பகவானை வழிபட்டனர். பெண்கள் கூறுகையில், "மழைசோறு எடுத்து, வருண பகவானை வேண்டினால், மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனால், மழைசோறு எடுத்தோம், என்றனர்.