பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
11:07
இடைப்பாடி: பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. பூலாம்பட்டியில், புகழ்பெற்ற கைலாசநாதர், வரதராஜ பெருமாள் திருக்கோவில்களின் கோபுரங்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு, அதன் திருப்பணிகள், மூன்று கோடியே, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து, தீர்த்தக்குட ஊர்வலம், கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அதையடுத்து, கோபுர கலசங்களுக்கு புண்ணிய தீர்த்தங்கள் தெளிக்கும் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, இறையருள் நற்பணி மன்ற திருப்பணிக்குழு தலைவர் பாப்பி ஆகியோர், கலசங்களுக்கு தண்ணீர் ஊற்றினர். விழாவில், பூலாம்பட்டி சேர்மன் கருணாநிதி, இடைப்பாடி நகராட்சி சேர்மன் கதிரேசன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் கோபால், இறையருள் நற்பணி மன்ற செயலாளர் கணேசன், பொருளாளர் முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர் கோவிந்தன், உழவர் மன்ற அமைப்பாளர் நடேசன் உள்ளிட்ட, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.