வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில் ரூ.1.5 கோடி செலவில் திருப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2013 11:07
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி 32 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் ராஜகோபுரத்துக்கு அமைச்சர் பச்சைமால் அடிக்கல் நாட்டினார். நாகர்கோவில் வடசேரி தழுவிய மகாதேவர் கோயிலில், 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது இங்கு கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். கும்பாபிஷேக பணிகளுடன், இங்கு ராஜகோபுரம் கட்டவும் பக்தர்கள் முடிவு செய்தனர். இதற்காக 32 லட்சம் ரூபாய் செலவில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் தனது செலவில் இந்த கோபுரத்தை கட்டித்தருவதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்க விழா நடந்தது. அமைச்சர் பச்சைமால் இதனை தொடங்கி வைத்தார். இதில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ.,தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.