மதுரை: மதுரை வில்லாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, ஜூன் 25ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஜூலை 12ல் வைகையில் இருந்து தீர்த்தக் கலசம் எடுத்து வந்தனர். ஜூலை 14 முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு ஹம்பி தயானந்தபுரி சுவாமி தலைமையில் புனித நீர் கலச புறப்பாடும்,7.10 க்கு கும்பாபிஷேகமும் நடந்தது. அதன்பின் திருக்கல்யாணம், உச்சிகால பூஜையும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. இன்று காலை வைகை ஆற்றிலிருந்து முளைப்பாரி எடுத்தல், அன்னதானம், பொங்கல் நிகழ்ச்சிகளும் நாளை மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.