பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சஷ்டியை முன்னிட்டு, சஷ்டிக்குழு சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. இப்பூஜையில், வேலாயுதசாமிக்கு, பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், அரிசி மாவு, சந்தனம் போன்றவைகளால் அபிஷேக பூஜை நடந்தது. பின், சஷ்டிக்குழுவினர் சஷ்டி பாராயணம் செய்தனர். பின், வேலாயுதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இப்பூஜையை காண, கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குழுவினர் செய்தனர்.