ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாணம் விமரிசையாக திருமலையில் நடந்து கொண்டிருந்தது. ஆகாச ராஜனின் மகளான பத்மாவதி மணவறையில் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. வெட்கத்தால் கொடிபோல குனிந்து கிடக்கிறாளே என்று அனைவரும் எண்ணிக் கொண்டனர். ஆனால், பத்மாவதி ஸ்ரீநிவாசனின் முக அழகை இமைக்காமல் ரசித்து மகிழ்ந்தாளாம். அவள் கழுத்திலே கிடந்த ரத்னமாலையின் மத்தியில் பளபளப்பான மணி டாலர் இருந்தது. அதில் மணிவண்ணனான ஸ்ரீநிவாசனின் முகம் பளபள என்று எதிரொலித்தது. அந்தக் கள்ளி குனிந்த தலை நிமிராமல் அந்த பிம்பத்தையே ரசித்துக் கொண்டுஇருந்தாள்.