Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ... நாகமுத்துமாரியம்மன் செடல் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமூர்த்திமலையில் ஆடிப்பெருக்கு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
10:07

உடுமலை: திருமூர்த்திமலையில், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட, பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன. உடுமலை திருமூர்த்திமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், முதன்முறையாக ஆடிப்பெருக்கு விழா ஆக., 3, 4 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது. கண்காட்சி, நாட்டுப்புறக்கலைகள், அரசுத்துறை அரங்குகள், விளையாட்டுப்போட்டிகள் என இரண்டு நாட்களும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, வனத் துறை, இந்து அறநிலையத்துறை, உடுமலை ஊராட்சி ஒன்றியம், தளி பேரூராட்சி, சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் இக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, படகுத்துறை அருகிலுள்ள இடம் சமன் செய்யப்பட்டு, பந்தல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விழா நடக்கும் இரண்டு நாட்களும் திருமூர்த்தி அணையில் பரிசல் சவாரி செய்ய ஏற்பாடு செய்யப்படும். பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள் ளன. விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு இடங்களில் தகவல் பலகைகள் வைத்தல் ஆகிய பணிகளும் துவங்கியுள்ளன. காண்டூர் கால்வாய் பகுதியிலிருக்கும், ஊராட்சி ஒன்றிய மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வு மளிகைகளில் அடிப்படை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளன. ஐந்து அமைச்சர்கள் மற்றும் இதர உள்ளாட்சி பிரதிநிதிகள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். வாகனங்களை நிறுத்த தேர்வு செய்யப்பட்ட இடத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீன்வளர்ச்சித்துறை சார்பில் கண்காட்சி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் விழாவிற்காக செய்யப்பட உள்ளன. ஆடிப்பெருக்கு திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட குழுவினர் திருமூர்த்திமலையில் முகாமிட்டுள்ளதால், விழாவிற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரில் ஸ்ரீ ராம நவமி விழா, சைத்ர சுக்ல நவமி வரும் ஏப்ரல் 6, 2025 அன்று தெய்வீக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் சுயம்புவாகவும், வாயு தலமாகவும் சிறந்து ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 
temple news
ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா துவங்கியது. ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar