Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில் உண்டியல் ... ஆடி 18க்கு பெருக்கெடுத்து ஓடும் காவிரி: பொதுமக்கள் மகிழ்ச்சி! ஆடி 18க்கு பெருக்கெடுத்து ஓடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பனிமயமாதா ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
10:07

தூத்துக்குடி: உலகப்புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது.கொடியேற்ற விழாவினை முன்னிட்டு நகர வீதிகளில் இன்று கொடிப்பவனி நடக்கிறது.தூத்துக்குடிக்கு பனிமய அன்னையின் சொரூபம் 1555ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி தூத்துக்குடி வந்து சேர்ந்தது. அதன் பிறகு 1582ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கல்லூரி கோவிலான புனித புவுல் சிற்றாலயம் புதுப்பிக்கப்பட்டு பனிமய அன்னையின் திருவிழாவாக அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு புனித பனிமய அன்னை ஆலயம் நிறுவப்பட்டு 300 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தங்கத்தேர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவினை முன்னிட்டு நாளை காலை 6.30 மணிக்கு மூன்றாம் திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதைத்தொடர்ந்து ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து 9 மணிக்கு திருப்பலி நடக்கிறது.மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பங்குதந்தை செல்வராஜ் அடிகளால் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து மாலை 5.30மணிக்கு இளையோருக்கான திருப்பலியும், இரவு செபமாலையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது.கொடியேற்ற விழாவினை முன்னிட்டு இன்று மாலை 6மணிக்கு திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நடக்கிறது. நவநாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு செபமாலையும், 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு செபமாலையும், பிற்பகல் 3 மணிக்கு செபமாலையில் மறையுரை, அருளிக்க ஆசீர், இரவு 7.15 மணிக்கும், செபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் துணை பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி; செப். 7ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று அயோத்தி ராமர் கோவிலில் மதியம் 12:30 மணிக்கு கோயில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு ... மேலும்
 
temple news
சென்னை ; சென்னையில் ஓணம் பண்டிகையையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஓணம் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் நேற்று துவங்கிய திருவோண விருந்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar